தமிழகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி... சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த ஆணை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14,15,16 ஆகிய தினங்களில் விடுமுறையை கொண்டாட தமிழகம் முழுவதும் சொந்தஊருக்கு மக்கள் பயணம் செய்ய உள்ளனர். ஆனால், மீண்டும் பணிக்கு திரும்புவதில் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, 17 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற 17 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த விடுமுறை நாளில் சரிகட்டும் விதமாக அடுத்து வரக்கூடிய இருபத்தி ஒன்பதாம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

குறிப்பு : வருகின்ற 18ம் தேதி தைப்பூசம் அரசு விடுமுறை என்பதால் இந்த முறை அரசு ஓஷியர்களுக்கு 5 நாள் விடுமுறை கிடைத்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 17 govt leave


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->