அஞ்சா நெஞ்சன்' திரு.பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்ததினம்! - Seithipunal
Seithipunal


திராவிட இயக்கத் தலைவர் 'அஞ்சா நெஞ்சன்' திரு.பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்ததினம்!.

திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை அழகர்சாமி (Pattukkottai Alagiri, ஜூன் 23, 1900 -  மார்ச் 28, 1949)  சமூக சீர்திருத்தவாதி, தமிழக கவிஞரும் ஆவர். இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தில் வாசுதேவ நாயுடு - கண்ணம்மா இணையருக்கு  மகனாக பிறந்தார். இவர் கண்டி நாயக்க மன்னரான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவர். இவர் தந்தை, இராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியர். இவர் முதல் உலகப் போர் காலத்தில், தன் முன்னோர்களைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது 1 ஆகத்து 1938 அன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டோருடன் சேர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் தொடங்கி மதராஸ் வரை நடைப்பயண இந்தி எதிர்ப்புப் பரப்புரை செய்தார்.

திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சைக் கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது. தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்தச் சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாகப் பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதைச் சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கிய அந்தச் சிறுவன்தான் மு. கருணாநிதி.

பட்டுக்கோட்டை அழகிரி, காசநோயின் தாக்கத்தால்  தனனது 49-ஆம் அகவையில் காலமானார். அவர் மறைவுக்கு விடுதலை இதழில் இரங்கல் தெரிவித்த பெரியார், "நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு நண்பரும் என்னை மனப்பூர்வர்மாய் நிபந்தனை இல்லாமல் பின்பற்றிவருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார்.உண்மையான வீரமும் தீரமும் உள்ளவர், இச்சமயத்தில் முடிவெய்திவிட்டது என்பது எனக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது என்பதோடு இயக்கத்துக்கும் பதில் காணமுடியாத பெருங்குறை என்றே சொல்லுவேன்" என்று குறிப்பிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of Anja Nenjhan Mr Pattukottai Alagiri


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->