பிரபல ஓட்டலில் நிர்வாணமாக சுற்றி வந்த ஐடி ஊழியர் கைது.!! - Seithipunal
Seithipunal


பிரபல ஓட்டலில் நிர்வாணமாக சுற்றி வந்த ஐடி ஊழியர் கைது.!!

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வடமாநிலத்தவர்கள் உள்பட ஏராளமானோர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதேபோல், அந்த  ஓட்டலில் ஐடி ஊழியர் ஒருவரும் தன் பெண் தோழியுடன் இரண்டு நாட்களாக அரை எடுத்துத் தங்கி இருந்தார். இந்த ஐடி ஊழியர் மது போதையில் நிர்வாணமாக ஓட்டலில் அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்துள்ளார். 

இதை பார்த்து ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், அந்த ஐடி ஊழியர் திடீரென வடமாநிலத்தவர் ஒருவர் தங்கிருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனால் பதறிய அவர்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டதோடு, அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். 

இந்தக் கூச்சல் சத்தம் கேட்டு மற்ற அறையில் தங்கியிருந்தவர்கள் ஓடிவந்து, சம்பவம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அவர்கள் உடனே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரை உடை அணிய வைத்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்  ஓஎம்ஆர் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் என்பதும், பெண் தோழியுடன் இரண்டு நாட்களாக ஓட்டலில் தங்கியிருந்த‌தும் தெரிய வந்த‌து. மேலும், அந்த வாலிபர் தான் போதையில் இருந்த‌தால் நிதானமின்றி இவ்வாறு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து போலீசார் அந்த ஐடி ஊழியரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT company employee arrested for rounds without dress in hotel


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->