தொப்புள் கொடி அறுக்கப்படாத முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட பெண்குழந்தை..! - Seithipunal
Seithipunal


முட்புதருக்குள் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், புல்லூர் கிராமத்தில் உள்ள முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்த போது பாலீத்தீன் பையில் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில், பிறந்து சில மணிநேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று உள்ளது. மழையில் நினைந்து கொண்டிருந்த அந்த குழந்தையை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட்டு வருகின்றனர். குழந்தையின்  பெற்றோர் யார் அதனை யார் வீசி சென்றது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Infant Founded in Cuddalore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->