தமிழகத்தின் இந்த 5 மாவட்ட மக்களே உஷார்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Indian Meteorological Centre Announce Rain 24 November 2020
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், புயலும் உருவாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களுக்கான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் 24 ஆம் தேதியான நாளை 5 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 24ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் பகுதிகளில் கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களில் இதனைப் போன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Indian Meteorological Centre Announce Rain 24 November 2020