தினமும் குடி.. சண்டை.. ஆத்திரமடைந்த மனைவி எடுத்த பாட்டில்..! அரங்கேறிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் செந்தில் (வயது 36). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சித்ரா (வயது 33). இவர்கள் இருவருக்கும் வெற்றிவேல் (வயது 12) மற்றும் ஹரிஷ் (வயது 10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

கண்டமங்கலத்திலேயே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வெற்றிவேல் ஏழாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., ஹரிஷ் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். செந்திலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை அடுத்து., தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

மேலும்., மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் செந்தில் மனைவியிடம் தகராறு செய்து வந்த நிலையில்., சம்பவத்தன்று மனைவியின் காலில் இருந்த கொலுசுகளை வலுக்கட்டாயமாக வாங்கி அங்குள்ள அடகு கடையில் ரூ.2 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். 

அடகு வைத்த பணம் முழுவதையும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து வழக்கம் போல தகராறு செய்து கொண்டு இருந்த நிலையில்., ஆத்திரமடைந்த சித்ரா மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து., கணவரின் மீது ஊற்றி தீவைத்துள்ளார். 

இதில் படுகாயமடைந்து அலறிய செந்திலின் அலறல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவசர ஊர்தியின் மூலமாக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் செந்தில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., தலைமறைவான சித்ராவை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vilupuram wife try to kill husband due to drink torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->