இன்ஸ்டாவின் இன்ஸ்டன்ட் காதல்.. வாழ்க்கையை நூடுல்ஸாக எண்ணி எஸ்கேப் ஆன சிறுமி... மகளை காணாது கண்ணீரில் பரிதவிக்கும் பெற்றோர்..!!
in Vellore girl missing insta love police search
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதுடைய சிறுமி அங்குள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் வரன் பார்த்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம்போல வீட்டில் இருந்து புறப்பட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் மாலையில் வீடுதிரும்ப வேண்டிய சிறுமி வீடு திரும்பாமல் இருந்த நிலையில், நீண்ட நேரம் ஆனதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து அவரது தோழிகளுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துளள்னர்.
சிறுமியின் தோழிகளும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறவே, இதனால் பதறிப்போன பெற்றோர் அங்குள்ள வடக்கு வேலூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பான புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராம், டிக் டாக் மற்றும் வாட்சப், முகநூல் போன்ற சமூகவலைத்தளத்தில் அதிகளவு மூழ்கி கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ஈரோடு பகுதியை சார்ந்த இளைஞருடன் பழக்கமும் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்த நிலையில், அலைபேசி எண்ணை பகிர்ந்துகொண்டு பேசியுள்ளனர். இதனையடுத்து சிறுமியை காதல் வலையில் பல கவிதைகளை வீசவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நேரத்தில் பெற்றோர்கள் திருமணம் முடிக்க வரன் பார்த்து வந்த நிலையில், காதல் ஆசையில் மாணவி ஈரோட்டிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. மாணவியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமியின் நிலைமை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.
Tamil online news Today News in Tamil
English Summary
in Vellore girl missing insta love police search