தந்தையின் உடலுக்கு இராணுவ மரியாதை செலுத்தி., உறுதிமொழி ஏற்றுக்கொண்ட வீரமகள்.!!
in vellore army man daughter gives her father army salute
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியை சார்ந்த செந்தில்குமார். சிறுவயதில் இருந்தே நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்று ஆசையுடன் இருந்த இவர்., இராணுவத்தில் இணைந்து., மத்திய துணை இராணுவ படையின் தலைமை காவலராக அந்தமானில் பணியாற்றி வந்தார். இந்த தருணத்தில்., நேற்று முன்தினதன்று தனது நண்பர்களுடன் அங்குள்ள கடல் பகுதியில் குளிப்பதற்கு சென்று இருந்தார்.
கடலில் உற்சாமான குளியலை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி கொண்டு இருந்த நிலையில்., எதிர்பாராத விதமான ராட்சத அலையில் சிக்கி., கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்களும் இவரை மீட்க போராடிய நிலையில்., இவர் உயிரற்ற நிலையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளார். இவரின் உடலை கண்டு நண்பர்கள் கண்ணீர் சோகத்தில் மூழ்ங்கியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இவரின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு., இது குறித்த தகவல் குடும்பத்தாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவரது உடல் விமான மூலம் சென்னைக்கு வந்தடைந்தது. விமான நிலையில்., துணை இராணுவ படையினர் சிறப்பாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இராணுவ உடையில் கம்பீரமாக தோற்றமளித்த செந்திலை., உயிரற்று கிடந்த நிலையில் பார்த்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் கதறியழுதனர்.
தனது தந்தையின் உடலை வாங்க வந்திருந்த செந்தில்குமாரின் 14 வயதுடைய மகளான ஸ்ரீதான்யா., தந்தையின் உடலுக்கு இராணுவ மரியாதையை செலுத்தியது., அங்கிருந்த இராணுவ வீரர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அனைவருக்கும் முன்னணியில் தனது தந்தைக்கு இராணுவ வணக்கம் செலுத்தியது., அங்கிருந்த குடும்பத்தாரிடையேயும் - இராணுவ வீரர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியது.
இதற்கு பின்னர் தந்தையின் உடலுக்கு முன்னிலையில் விழுந்து ஸ்ரீதான்யா கண்ணீரில்., அப்பா என்று கூறி கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., தனது தந்தையின் பணியை நான் தொடர்வேன் என்றும்., தந்தையின் உடலுக்கு முன்னதாக உறுதியும் எடுத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செந்தில்குமாரின் உடலானது வாணியம்பாடிக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கமும் செய்யப்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore army man daughter gives her father army salute