டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய கார்.. 4 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பகுதியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து காரொன்று தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் இருந்து சேலத்தினை நோக்கி புறப்பட்ட காரொன்று உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள வண்டிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த காரின் டயரானது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறிய நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிரில் வந்த பேருந்தின் அடியில் சிக்கியுள்ளது. 

accident,

பின்னர் கயிறு மூலமாக பேருந்து கீழே சாய்க்கப்பட்டு காருக்குள் இருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். மேலும்., காரில் பயணம் செய்த நபர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த நிஷா., மல்லிகா மற்றும் கார் ஓட்டுநர்., 3 வயது குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும்., காரில் இருந்த 5 வயதுடைய குழந்தை மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in ulunthoorpettai car accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->