மதுபோதை ஆத்திரத்தில் 16 வயது மகளை அடித்து கொலை செய்த தந்தை?..! திருச்சி மணப்பாறையில் சோகம்..!!
in trichy girl killed by her father police investigation going on
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்துள்ள நாடுகட்டுப்பட்டி பகுதியை சார்ந்தவர் செல்வராஜ் (வயது 38). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சினேகா என்ற 16 வயதுடைய மகள் உள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் செல்வராஜுக்கு மது அருந்தும் பழக்கமானது இருந்து வந்துள்ளது.
இதனால் தினமும் காலையில் பணிக்கு சென்றுவிட்டு., மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளான். இந்த நிலையில்., இதனை போன்று பல நாட்கள் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளான். இந்த நிலையில்., இதனைப்போன்று நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளான்.
இந்த சமயத்தில்., இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக செல்வராஜ் மனைவியை அடித்துள்ளான். இதனை கண்ட சிறுமி சினேகா., எதற்க்காக அம்மாவை அடிக்கிறாய்? என்று கேள்வி கேட்கவே., ஆத்திரமடைந்த செல்வராஜ் மகள் என்றும் பாராது மண்வெட்டியை எடுத்து குழந்தையை தாக்கியுள்ளான். பின்னர் இவர்களுக்குள் சண்டை முடிந்து அனைவரும் உறங்க சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில்., நேற்று வீட்டில் தனியாக இருந்த சினேகா தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார். மகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற தாயார்., வீட்டிற்கு திரும்பியதும் மகள் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி விரைந்த அக்கம்பக்கத்தினருக்கு சினேகா தூக்கிட்டு தகவலானது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., சினேகா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? செல்வராஜ் தாக்கியதில் உயிரிழந்த பின்னர் தூக்கில் தொங்க விட்டு நாடகம் அரங்கேற்றுகின்றனரா? என்பது பிரேதபரிசோதனையின் முடிவில் வெளிவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in trichy girl killed by her father police investigation going on