பிறந்த பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து தங்க சங்கிலி., புதிய ஸ்மார்ட்போன்..! திருநெல்வேலியில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆறுமுகபட்டியை சார்ந்தவர் இயேசு இருதயராஜ். இவரது மனைவியின் பெயர் புஷ்பலதா. இவர்கள் இருவருக்கும் ஆறு வயதுடைய மகள் உள்ள நிலையில்., புஷ்பலதா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். 

இவருக்கு கடந்த 8ம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தநிலையில்., ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் காரணத்தால் மற்றொரு பெண் குழந்தை வேண்டாம் என்று மனைவியை கேட்காமல் ஒரு காரியம் செய்ய இருதயராஜ் முடிவெடுத்துள்ளார். 

இவரின் திட்டப்படி குழந்தை இல்லாத ஒரு தம்பதியினருக்கு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை விற்க முடிவு செய்து., இதற்கு இடைத்தரகராக இருக்கும் மூன்று நபர்களுக்கு ரூ.80,000 வழங்கியுள்ளார். 

baby, baby images, cute baby,

மேலும்., மீதமிருக்கும் ரூ.ஒரு லட்சத்தில் புதிய அலைபேசி ஒன்றை வாங்கியுள்ளார். பிறந்த ஆண் குழந்தைக்கு தங்கச்சங்கிலியை வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். இவரின் ஆடம்பரத்தை கண்டு சந்தேகமடைந்த மனைவி இவை அனைத்தையும் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்டுள்ளார். 

இதனை கேட்ட இருதயராஜ் தனது இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்துள்ளதாக கூறி விட்டு வெளியே சென்றுள்ளார். இதுமட்டுமல்லாது புஷ்பலதா சுதாரித்துக் கொண்டு பார்க்கையில் பெண் குழந்தை காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. 

money, indian money, money images, rupees,

இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., குழந்தை விற்பனை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். 

இதனை அறிந்த காவல் துறையினர் மூன்று இடைத்தரகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இருதயராஜையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை மீட்டு அங்குள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tirunelveli child selled by father police rescued investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->