மருத்துவமனைக்கு சென்ற தாயும் - 9 மாத குழந்தையும் உடல் நசுங்கி பலியான சோகம்... தூத்துகுடியில் பரிதாபம்.!!
in thoothukudi mother and child died accident
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகேயிருக்கும் வெங்கடேசபுரம் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி காளியப்பன் (வயது 43). இவரது மனைவியின் பெயர் மாலா (வயது 31). இவர்களுக்கு வெள்ளைச்சாமி என்கிற 9 மாதமாகும் கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் மாலாவிற்கு மாத்திரை வாங்குவதற்காக கணவன் - மனைவி இருவரும் தூத்துக்குடி செல்வதற்கு முடிவு செய்து, குழந்தையுடன் விளாத்திகுளம் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு பயணம் செய்துள்ளனர்.
அங்குள்ள ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கே.சண்முகாபுரம் அருகேயுள்ள பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, தூத்துக்குடியை நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் மாலா மற்றும் அவரது குழந்தை பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காளியப்பன் மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் பெரியசாமியிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thoothukudi mother and child died accident