எனது வாழ்க்கையை எப்படியாவது காப்பாற்றுங்கள்.. தூத்துக்குடியில் கண்ணீரில் கரைபுரளும் கல்லூரி மாணவி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த இளம்பெண்ணொருவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இவரை தாலமுத்துநகர் அருகேயுள்ள மேல் அழகாபுரி பகுதியை சார்ந்த வினீத் (வயது 25) என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியும் வந்துள்ளார்.  

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி இது தொடர்பாக அங்குள்ள தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வினீத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்றவில்லை. 

வினீத்தை கைது செய்து, அவனிடம் உள்ள விடீயோக்களை கைப்பற்ற காவல் துறையினர் எந்த விதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இளம்பெண் அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், அந்த புகாரில் வினீத்தை கைது செய்ய காவல் துறையினர் சார்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.. என்னை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ காட்சியை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறான். 

வினீத்தின் மிரட்டலுக்கு பயந்து நான் பெற்றோருடன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து வருகிறேன்.. எனது வாழ்க்கையை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thoothukudi girl complaint to save life form drama lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->