காதலிக்கும் போதே ஆட்பறித்த குரங்கு மனது.. திருவண்ணாமலை கொலை சம்பவத்தில் பகீர் தகவல்.!!
in thiruvannamalai girl killed her lover due to affair
திருவண்ணாமலை ஆரணி அருகேயிருக்கும் பகுதியில் இரண்டாவது காதலருடன் சேர்ந்து, முதல் காதலனை பெண் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி முள்ளிப்பட்டு பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த 18 ஆம் தேதியன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.
இவரது உடலை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பான விசாரணையில், ஆரணி அருகேயுள்ள சைதாபேட்டை பகுதியை சார்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கிருஷ்ணவேணிக்கு அப்பகுதியை சார்ந்த அஜித்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளதால், கிருஷ்ணவேணியும் - அஜித்குமாரும் காதலித்து வந்துள்ளார்.
இதனை அறியாத சுரேஷ் தனது காதலில் உறுதியாக இருந்த நிலையில், கிருஷ்ணவேணியை திருமணம் செய்து கொள்ள வற்பறுத்தியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணவேணி திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவே, சுரேஷ் சில நாட்கள் களைக்கட்டும் என்று காத்திருந்துள்ளார்.
இந்த நேரத்தில், தனது முதல் காதலனை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கிருஷ்ணவேணி, சுரேஷை ஏமாற்றி வரவைத்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையில் அஜித்குமாரை காவல் துறையினர் நேற்று கைது செய்த நிலையில், தலைமறைவாக இருக்கும் கிருஷ்ணவேணியை தீவிரக தேடி வருகின்றனர். அஜித்குமார் நீதிபதியின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு, வேலூரில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in thiruvannamalai girl killed her lover due to affair