8 வயது குழந்தையை சீரழித்த 65 வயது கொடூரனுக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை.!!
in thirupur court order to sexual harassment culprit for 7 year jail
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் சிறு குழந்தையாக இருக்கும் பெண்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை தொடர்ந்து., கொடூர எண்ணத்தை கொண்ட காம கொடூரர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோதிநகர் பகுதியில் வசித்து வந்த காம கொடூரனின் பெயர் அனீபா (வயது 65). இவரது வீட்டருகே பெற்றோருடன் சுமார் 8 வயதுடைய பெண் குழந்தை வசித்து வந்தார்.
இவர் வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த சமயத்தில்., குழந்தையை கண்ட காம கொடூர முதியவன்., குழந்தைக்கு மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தையை கூறி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சியான பக்கத்து வீட்டு பெண் சிறுமியின் பாட்டியிடம் கூறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி சிறுமியிடம் விசாரித்த சமயத்தில்., சிறுமியிடம் அத்துமீறியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காம கொடூர முதியவனை கைது செய்த நிலையில்., இது குறித்த விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இன்று தீர்ப்பானது வெளியாகியுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன் அனீபாவிற்கு 7 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
English Summary
in thirupur court order to sexual harassment culprit for 7 year jail