பச்சிளம் மகளை கொலை செய்து தூக்கில் தொங்கிய தாய்..! திருப்பூரில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியை சார்ந்தவர் தேவேந்திரன் (வயது 37). இவரது மனைவியின் பெயர் அருள்மொழி (வயது 33). இவர்களது மகனின் பெயர் கோகுலகிருஷ்ணன் (வயது 10) மற்றும் மகளின் பெயர் கீர்த்தி (வயது 6). தனது குடும்பத்துடன் தேவேந்திரன் திருப்பூரில் உள்ள போயம்பாளையத்தில் தங்கியிருந்துள்ளார். 

இங்கிருந்து அவிநாசியில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்திற்கு சென்று பணியாற்றி வரும் நிலையில்., இதே நிறுவனத்தில் அருள்மொழியும் பணியாற்றி வந்துள்ளார். குழந்தைகள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்து கொண்டு இருந்த நிலையில்., கணவன் - மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

husband wife fight,

இந்த நிலையில்., கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஏற்பட்ட தகராறின் காரணமாக தேவேந்திரன் குடும்பத்தை பிரிந்து சென்ற நிலையில்., 2 குழந்தைகளுடன் அருள்மொழி வசித்து வந்துள்ளார். பள்ளியில் பயின்று வந்த கோகுல கிருஷ்ணனிற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்ற காரணத்தால் தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்த சமயத்தில் நேற்று மாலை நேரத்தில் கீர்த்தி வீட்டின் முன்னதாக விளையாண்டுகொண்டு இருந்த நிலையில்., அருள்மொழி மட்டும் இல்லத்தில் இருந்துள்ளார். வீட்டின் வெளியே விளையாண்டுகொண்டு இருந்த குழந்தையை வீட்டிற்குள் வேகமாக தூக்கி சென்ற நிலையில்., சிறுமி அபயக்குரல் எழுப்பி அலறியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். 

died, murder, killed, suicide attempt,

இந்நேரத்தில் அருள்மொழி தூக்கில் தொங்கியும்., சிறுமி கீர்த்தி மயங்கியும் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்று அனுமதித்த நிலையில்., சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்., அருள்மொழி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனைதொடர்ந்து இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur child killed mom attempt suicide police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->