17 வயது சிறுமி துடிதுடிக்க பாலியல் பலாத்காரம்.. காதலன் என்ற நாடகக்காதல் காமுகனின் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை கக்கன்ஜி நகர் பகுதியை சார்ந்தவர் முருகன். இவரது மகனின் பெயர் வள்ளலகண்டன் (வயது 25). இவர் கங்கைகொண்டான் பகுதியில் இருக்கும் தனியார் டயர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது வீட்டிற்கு அருகே 16 வயதுடைய மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில், இந்த மாணவியின் தோழி அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட வள்ளலகண்டன் மாணவியிடம் பேச்சுக்கொடுத்து பழகியுள்ளார். 

இதனையடுத்து மாணவியுடன் அன்பாக பேசி வந்த நிலையில், மாணவிக்கு புதிய அலைபேசியை வாங்கி கொடுத்து பேசி வந்துள்ளான். இந்த தருணத்தில், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறிய காமுகன் வெளியூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

மாணவியின் பெற்றோர் மாணவியை காணாது தேடியலைந்த நிலையில், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இது தொடர்பான விசாரணையில் வள்ளலகண்டன் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்ததை அடுத்து, இருவரையும் கண்டறிந்து மாணவியை மீட்டனர். பின்னர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காமுகன் வள்ளலகண்டன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in thirunelveli child sexual abuse by drama lover


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->