மனைவியை வெட்ட முயற்சித்த போது., மகளை காக்க விரைந்த தாய்... துடிதுடிக்க அரங்கேறிய சோகம்..!!
in theni woman injured accidentally fight police investigation going on
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகேயுள்ள இரதிமக்கள்பட்டி தெரு பகுதியை சார்ந்தவர் ஜெகதீசன் (வயது 33). இதே பகுதியை சார்ந்த குப்பம் என்பவரின் மகளிற்கும் - ஜெகதீசனிற்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் தற்போது இரண்டு மகள்கள் உள்ள நிலையில்., ஜெகதீசன் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் செயலை வழக்கமாக வைத்துள்ளார்.
வீட்டிற்கு மது அருந்திவிட்டு வரும் ஜெகதீசன் அடிக்கடி குடும்பத்தாருடன் தகராறு செய்தும் வந்துள்ளார். இதனால் அவ்வப்போது மனைவி கோபமடைந்து தனது தாயாரின் இல்லத்திற்கு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில்., சம்பவத்தன்று நடைபெற்ற சண்டையால் மனைவி தனது தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிடவே., ஆத்திரமடைந்த ஜெகதீசன் அரிவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார். மகளை காக்கும் பொருட்டு குப்பம் குறுக்கே வரவே., குப்பம்மாள் வெட்டுக்காயத்தால் பாதிக்கப்ட்டுள்ளார்.
இதனையடுத்து இவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., வழக்குப்பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni woman injured accidentally fight police investigation going on