அக்கா கணவரை போட்டு தள்ளிய இளம்பெண்..! தேனியில் பேரதிர்ச்சி சம்பவம்.!!
in theni murder police investigation
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சார்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 30). இவரது மனைவியின் பெயர் நிரஞ்சனா (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை அன்று காலை 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் அங்குள்ள ஒத்தம்பட்டி கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
இந்த நேரத்தில்., சண்முகா நதி செல்லும் வழியில் சென்று கொண்டு இருந்த பாண்டீஸ்வரனின் அக்கா ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் மணிகண்டன் நடந்து சென்று கொண்டு இருப்பதை கவனித்துள்ளனர். இவர்களை இடைமறித்த இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாத்தில்., தான் வைத்திருந்த அரிவாளால் நிரஞ்சனா மணிகண்டனை தாக்கியுள்ளார்.
மேலும்., பாண்டீஸ்வரனும் தாக்குதலில் ஈடுபடவே., படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., மணிகண்டனின் மனைவி ராஜேஸ்வரியின் கையில் காயம் ஏற்பட்டது. ராஜேஸ்வரி தற்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்., இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இரத்த வெள்ளத்தில் பலியாகியிருந்த மணிகண்டனின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில்., மணிகண்டனும் - பாண்டீஸ்வரியும் ஆனைமலை பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இவர்களின் தொழில் நஷ்டத்தை சந்தித்ததால்., இருவரும் வாழையிலை வெட்டும் கூலித் தொழிலுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். இந்த நேரத்தில்., மணிகண்டன் அவ்வப்போது மது அருந்திவிட்டு ராயப்பன்பட்டிக்கு சென்று அங்குள்ள சிலரிடம்., தனது மைத்துனர் மனைவி நடத்தை குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதுதொடர்பாக இரு குடும்பங்களுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த பிரச்சனையை பேசி முடிக்க பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா சென்று கொண்டு இருந்த நிலையில்., இருவருக்குள் ஏற்பட்ட தகராறை அடுத்து கொலைவெறி தாக்குதல் மற்றும் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்த பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனாவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni murder police investigation