நாடக காதலால் 7 மாத கர்ப்பமாக 15 வயது சிறுமி.! பலமுறை பலாத்காரத்தை கட்டவிழ்த்த நாடக காதல் காம கொடூரன்.!!
in thanjavur girl rapped by drama love culprit and she now 7 month pregnant
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு பெரும்பாலும் தெரிந்த நபர்களால் வழங்கப்பட்டு உள்ளது என்பது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லத்தில் இருக்கும் அரசு பள்ளியில் சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு வழக்கம் போல சென்று வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்துக்கொண்டு இருந்தார்.
இந்த சமயத்தில்., இவர் திடீரென மாணவி மயங்கி விழவே., இவரை கண்டு அதிர்ச்சியடைந்த சக தோழிகள் அதிர்ச்சியடைந்த நிலையில்., பாடம் எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர் மாணவியை மீட்டு அங்குள்ள வல்லம் மருத்துவமனையில் அனுமதித்தார்.
இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறி கூறவே., உடனடியாக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்., மாணவி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமிடம் மேற்கொண்ட விசாரணையில்., அங்குள்ள பிள்ளையார்பட்டியை சார்ந்த ஐடிஐ மாணவன் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காம கொடூரனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in thanjavur girl rapped by drama love culprit and she now 7 month pregnant