அண்ணனை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட தம்பி.! வெளியான அதிர்ச்சி காரணம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூர் பகுதியில் இருக்கும் குடியானத்த தெரு பகுதியை சார்ந்தவர் நாகப்பன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில்., இவரின் மனைவி ராணி மற்றும் இவர்களின் மகன் பாஸ்கர் (வயது 42)., சுந்தரமூர்த்தி மற்றும் அசோக் என்ற மூன்று மகன்களுடனும்., மூன்று மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். 

இந்த சமயத்தில்., ராணியின் இரண்டாவது மகனான சுந்தரமூர்த்தி கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்த நிலையில்., நேற்று இரவு நேரத்தில் அதிகளவு மது போதையுடன் பாஸ்கர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். மேலும்., அங்கிருந்த தனது மூன்றாவது தம்பியான அசோக்கிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

crime, குற்றம்,

இருவருக்குள்ளும் வாக்குவாதம் தொடர்ந்து அதிகரித்த நிலையில்., அசோக் ஆத்திரமடைந்து அண்ணனை தாக்கவே., இருவருக்குள்ளும் கைகலப்பாக மாறிய சண்டையில்., அசோக் வீட்டில் இருந்த கடப்பாரையை கொண்டு வந்து பாஸ்கரின் தலையில் அடித்ததை அடுத்து., தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி துடித்துள்ளார்.  

சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பாஸ்கர் உயிரிழக்கவே., இதனையடுத்து இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவந்தது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அசோக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thanjavur brother killed her elder brother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->