பக்கத்து தோட்டத்துக்காரரின் மனைவியின் மீது ஆசை..! அரங்கேறிய வெறித்தன சம்பவம்..! சேலத்தில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகேயுள்ள ஆனையம்பட்டி அம்பேத்கார் நகர் பகுதியை சார்ந்தவர் ராமர் (வயது 41). இவர் விவசாயியாக பணி செய்து வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் சாந்தி. இவர்கள் இருவருக்கும் விஷ்ணு என்ற 15 வயதுடைய மகனும்., விக்னேஷ் என்ற 11 வயதுடைய மகனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில்., கடந்த நான்கு மாதத்திற்கு முன்னதாக கணவருடன் ஏற்பட்ட மனப்பிரச்சனையில் சாந்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில்., ராமருக்கு சொந்தமாக மனக்கடு பகுதியில் இருக்கும் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த தருணத்தில்., கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வழக்கம்போல தனது விவசாய நிலத்திற்கு சென்ற ராமர் மீண்டும் இல்லத்திற்கு திரும்பாமல் இருந்துள்ளார். 

இவரை காணாது அங்குள்ள பல இடங்களில் ராமருடைய தம்பி மனைவி மஞ்சுளா மற்றும் மூத்த மகன் விஷ்ணு தேடியலைந்து திகைத்த நிலையில்., அங்குள்ள தோட்டத்து கிணற்றுக்கு அருகே இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மேலும்., இவரது கழுத்தில் மின் கம்பிகள் சுற்றப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

selam murder,

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கெங்கவல்லி காவல் துறையினர்., உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும்., சம்பவ இடத்தில் இருந்த அடையாளத்தை வைத்து மர்ம நபர்கள் கொலை செய்து., மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது போல ஜோடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல் வெளிவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணையில்., இராமருடைய பக்கத்து தோட்டத்தினை சார்ந்தவர் கலியமூர்த்தி (வயது 38). இவர் இராமருடைய சித்தப்பா மகன் ஆவர். கலியமூர்த்தியுடைய மகனின் பெயர் கனகா (வயது 34). இவர்கள் இருவரும் தோட்டத்திற்குள்ளேயே வீட்டினைக்கட்டி வசித்து வரும் நிலையில்., கனகாவிடம் ராமர் அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். 

இவரின் தொல்லைகளை தாங்காத கனகா இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த கலியமூர்த்தியும் ராமரை பலமுறை எச்சரித்த நிலையில்., நாக்குறிச்சி பகுதியை சார்ந்த உறவினர் மூலமாக பஞ்சாயத்தும் பேசப்பட்டுள்ளது. இதனையடுத்து இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறி கோவிலில் வைத்து கற்பூரம் அடித்து சத்தியம் செய்த நிலையில்., மதுஅருந்திய ராமர் மீண்டும் பாலியல் தொல்லை செய்து தகராறு செய்துள்ளார். 

selam murder,

இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக கனகா கடம்பூரில் வசித்து வரும் தனது தந்தை இராமருக்கு (கனகாவின் தந்தை பெயரும் ராமர், (வயது 60)) தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த ராமர்., தனது மகள் கனகா மற்றும் மருமகன் கலியமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ராமரை அடித்து நொறுக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து கொலையை மறைப்பதற்காக ராமரின் உடலில் மின்கம்பிகளை சுற்றி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சித்தரித்ததும்., பிரேதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இத்தகவல் அனைத்தும் வெளிவந்துள்ளது. இதனையடுத்து கலியமூர்த்தி., கனகா மற்றும் கனகாவுடைய தந்தை ராமர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam sexual torture killed by family police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->