தாலியெடுத்து கொடுத்த நண்பனே மோகம் கொண்ட சோகம்.. போதையில் அரங்கேறிய கொடூரம்.. வடமாநில வாலிபர்கள் வெறிச்செயல்.!!
in selam girl murder sexual torture police arrest north india youngster gang
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள திரிமலைகிரி பகுதியில் வெள்ளிப்பட்டறையை நடத்தி வரும் நபரியன் பெயர் தங்கராஜ். இவரிடம் பணிக்காக வடமாநிலத்தை சார்ந்த இளைஞர் ஆகாஷ், ஆகாஷின் மனைவி வந்தனா குமாரி, உறவினர் சன்னி குமார் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பணியில் சேர்ந்து சுமார் 10 நாட்கள் தான் ஆகும் என்ற நிலையில், கடந்த சனிக்கிழமையின் போது ஆகாஷ், வந்தனா குமாரி மற்றும் சன்னி குமார் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணைக்கு பின்னர் எதிர்வீட்டில் தங்கியிருந்து வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும், வினோத் ஆகாஷின் நண்பன் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் சேலம் இரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் இரயிலில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது.இதன்பின்னர் இது தொடர்பான தகவல் கேரள காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, பாலக்காடு இரயில் நிலையத்திற்கு வருகை தந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகளான அஜய், சூரஜ் கைது செய்யப்பட்டு தமிழக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆகாஷிற்கும் - வந்தனா குமாரிக்கும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னதாக வினோத் திருமணம் செய்து வைத்துள்ளான். இவர்கள் அனைவரும் ஒரே ஊரில் வசித்து வந்த நிலையில், பணிக்காக தமிழகத்திற்கு வந்துள்ளனர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த வினோத் வந்தனா குமாரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இந்த விஷயத்திற்கு வினோத்தின் நண்பர்களான அஜய், சூரஜ் மற்றும் விஜி உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த சமயத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலால் வந்தனாகுமாரி, ஆகாஷ், சன்னிகுமார் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள விஜியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஆகாஷ் - வந்தனா குமாரியின் பச்சிளம் குழந்தை செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், இது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam girl murder sexual torture police arrest north india youngster gang