பார்வையற்ற நபராக நடித்து கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி கள்ளகாதலிகளுடன் உல்லாசம்.. சேலத்தில் பகீர்.!!
in selam blind man miss use peoples to enjoy illegal affair girls
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியை சார்ந்தவர் அஸ்ரப் அலி (வயது 24). இவர் பொறியியல் பட்டதாரியாக இருந்து வரும் நிலையில்., வேலை தேடி அலைந்து வந்துள்ளார். பணிக்காக பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு., பேருந்தில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
இந்த சமயத்தில்., சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பகுதியை சார்ந்த கண் பார்வையற்ற நபரான டேவிட்டுடன் (வயது 38) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டேவிட் அஸ்ரப் அலியின் அலைபேசி எண்ணை வாங்கி அடிக்கடி பேசிக்கொண்டு வந்துள்ளார். இந்த நேரத்தில்., ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தையை அள்ளிவிட்டுள்ளார்.
இவரது வார்த்தைகளில் மயங்கிய அஸ்ரப் அளிக்கும் ரூ.4.25 இலட்சத்தை கூறிய நிலையில்., சொன்னபடி பணி ஏதும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து பணத்தை பலமுறை திரும்பி கேட்டும் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அஸ்ரப் அலி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் டேவிட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில்., கண் பார்வை இல்லாத நபராக இருந்து வரும் டேவிட் பேருந்து பயணத்தின் போது பயணிகளிடம் பேச்சுக்கொடுத்து., பார்வையற்ற நபர் என்ற அறிமுகத்துடன் பயணிகளுடன் நட்பாக பழகி அலைபேசி எண்ணை பெற்றுள்ளார். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு இனிக்க இனிக்க பேசி அரசு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரியுடன் பழக்கம் உள்ளது. அரசு வேலை பெற்று தருகிறேன் என்று கூறி வந்துள்ளார்.
இதனை நம்பும் பயணிகளிடம் பணத்தை பெற்று கொண்டதும்., இதுவரை சுமார் 50 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.50 இலட்சத்திற்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும்., இதனால் கிடைத்த பணத்தை வைத்து 10 க்கும் மேற்பட்ட கள்ளகாதலிகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in selam blind man miss use peoples to enjoy illegal affair girls