ஜில்லன்னு காத்து..அரசு ஒயின்ஸில் கட்டிங்..! கால விரிச்சி படுத்தோம்னா... அதிகாலையிலேயே குடிமகன் கொண்டாட்டம்.!!
in porur wine shop drinking culprit sleeping highway rainwater drain line
இன்றுள்ள காலங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போதையில் தள்ளாடி வருகின்றனர். மதுவிற்கும்., புகைப்பழக்கத்திற்கும்., கஞ்சா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளுக்கும் அடிமையாகி வருகின்றனர்.
இது போன்ற செயல்களால் இன்றைய இளைஞர் சமுதாயம் வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறோம்? என்பது தெரியாமல் தங்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.
மேலும்., இவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் நிலையில் உள்ள பெரியவர்களே போதையில் தள்ளாடுவதும்., பிலிப்ஸ் போன்று சாலையில் நின்று சண்டையிடுவதும்., பேருந்தை இடைமறித்து வீர சாகசம் புரிவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
சென்னையிலுள்ள போரூரில் இருந்து போரூர் சுங்கச்சாவடி செல்லும் ஒரு வழிப்பாதையில், அரசு உரிமை பெற்ற நவீன மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை முழுவதும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு., மதுபானக்கடையில் மது அருந்த ரூ.20 நுழைவுக்கட்டணமாகவும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இக்கடையில் மது அருந்தும் நபர்களால் இங்குள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம்.. மது அருந்திவிட்டு தள்ளாடும் போதையில் சாலையில் வந்துகொண்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கும்., இவ்வழியாக பணிகளுக்கு வந்து செல்லும் ஆண்கள்., பெண்களுக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்துகின்றனர்.
இப்பகுதியின் இல்லங்களின் வாயிலில் மது போதையில் சாலையில் வேட்டியோடு அரை நிர்வாண நிலையில் இருக்கும்., மது போதை ஆசாமியின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில்., வயதான முதியவரொருவர் போதையில் நெடுஞ்சாலையின் மழை நீர் வடிகால் பாதையில் போதையில் படுத்துறங்கும் காணொளிகள் வைரலாகி வருகிறது.
அதிகாலையிலேயே பிளாக்கில் மது அருந்திய முதியவர்., வீட்டிற்கு செல்ல இயலாமல் உறங்குவது., பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என்றாலும்., அதிகாலையிலேயே செய்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in porur wine shop drinking culprit sleeping highway rainwater drain line