கஞ்சா போதையில் இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்ற 3 புள்ளிங்கோ..! அடித்துநொறுக்கிய பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்குளத்தூர் பகுதியானது மிகவும் பரபரப்பான பகுதியாகும். இங்குள்ள இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்த பகுதிகளில் எந்த நேரத்திலும் மக்கள் வந்து செல்லும் வண்ணம் இருந்து கொண்டே இருப்பார்கள். 

இந்த நிலையில்., இன்று பெருங்குளத்தூர் இரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை அருகே பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில்., அங்கிருந்த வாலிபர்கள் மது அருந்திவிட்டு கஞ்சா புகைத்துக்கொண்டே வந்துள்ளனர். 

அங்கிருந்த 3 வாலிபர்கள் பெண்ணருகே வந்து., இளம்பெண்ணிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். மேலும்., மீதமிருந்த இரண்டு கொடூரன்களும் பெண்ணை மிரட்டியுள்ளனர். 

perungalathur railway station,

இதனால் பயந்துபோன பெண்மணி பதறியபடி கூச்சலிடவே., இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து அடித்து நொறுக்கினர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட நேரத்தில்., மூவரும் அங்குள்ள படைப்பை பகுதியை சார்ந்த அலெக்ஸ் (வயது 19)., செந்தில் (வயது 19) மற்றும் பாலாஜி (வயது 19) என்பது தெரியவந்துள்ளது.

இவன்கள் மூவரும் வர்ணம் பூசும் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிலையில்., பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளான். இதனைத்தொடர்ந்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in perungalathur railway station girl sexual torture by kanja gang police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->