இளம்பெண்ணிற்கு அலைபேசியில் பாலியல் தொல்லை..! தட்டிக்கேட்ட கணவனை கொடூர கொலை செய்த ஆசாமி..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் வெண்ணந்தூர் பிள்ளையார்கோவில் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவியன் பெயர் வசந்தா. இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., குடும்ப பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனையை தீர்க்க ஜோதிடரை காணுவதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னம்பட்டி பகுதியை சார்ந்த ராமச்சந்திரன் என்பவரை அணுகியுள்ளார். 

இதனையடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி கிருஷ்ணன் வீட்டிற்கு வருகை தந்து., வீட்டில் பரிகார பூஜையை செய்த நிலையில்., சில சடங்குகள் தொடர்பாக கிருஷ்ணனின் மனைவியான வசந்தாவின் அலைபேசி எண்ணை பெற்று சென்றுள்ளான். 

அலைபேசி எண்ணை பெற்ற ஜோதிடரின் முகத்திரை கிழிந்து கொடூர எண்ணங்கள் வெளிவர துவங்கியுள்ளது. மேலும்., வசந்தாவிடம் தொடர்ந்து ஆபாசமாக பேச துவங்கியுள்ளான். இது தொடர்பாக வசந்தா தனது கணவரிடம் தெரிவித்த நிலையில்., இதனை அறிந்த கிருஷ்ணன் ராமச்சந்திரனை கண்டித்துள்ளார். 

fight, சண்டை,

இதனையும் ஏற்றுக்கொள்ளாத கொடூரன் தொல்லையை அதிகரிக்கவே., இது தொடர்பாக கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் ராமச்சந்திரனை அழைத்து கண்டித்துள்ளனர். 

இதனால் கடுமையான ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் கடந்த திங்கள்கிழமை இரவன்று மது போதையில் கிருஷ்ணனின் இல்லத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து., மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ராமச்சந்திரன் கிருஷ்ணனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளான். 

உயிர் ஊசலாடும் தருணத்தில் கிருஷ்ணன் அலறவே., இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும்., மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in namakkal sexual torture man murder by culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->