கடன் தொல்லையால் குடும்பத்தோடு துயர முடிவு எடுத்த பரிதாபம்.! நாமக்கல்லில் பெரும் சோகம்.!!
in namakkal family members attempt suicide due to loan problem
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டன்பட்டி அருகேயுள்ள காரைக்கால் பகுதியை சார்ந்தவர் மோகன் (வயது 57). இவர் ஆழ்துளை கிணறு போடும் ரிக் லாரியொன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவரது மனைவியின் பெயர் நிர்மலா (வயது 47)., இவரது மகளின் பெயர் சவுமியா (வயது 21). இவர் சட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
மோகனிற்கு ரிக் வண்டி தொழில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு., அடுத்தடுத்து வருமானமும் இல்லாமல் கடனை திருப்பி கொடுக்க இயலாமல் இருந்துள்ளார். இதனால் கடன் தொகை அதிகரித்து., வட்டி கட்ட இயலாமல் தவித்து வந்துள்ளார்.
இவருக்கு பணம் வழங்கிய அனைவரும் பணத்தை கட்ட தொடர்ந்து நெருக்கடி கொடுத்த வந்த நிலையில்., தனது மனைவியிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்து., குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் மூவரும் இன்று அதிகாலை மோகன்., நிர்மலா மற்றும் சவுமியா ஆகிய மூவரும் விஷமருந்தி மயங்கி இருந்துள்ளார். விஷத்தின் வீரியம் மோகன் மற்றும் நிர்மலா ஆகியோரை மயக்க நிலைக்கு கொண்டு சென்ற நிலையில்., திடீரென பதற்றமடைந்த தனது சித்தப்பாவிற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தப்பா அன்பழகன் மற்றும் உறவினர்கள் பதறியபடி வந்து மூவரையும் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக சவுமியாவை ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் மற்றும் நிர்மலா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in namakkal family members attempt suicide due to loan problem