தலைக்கேறிய போதை...! டாஸ்மார்க்கே வீடு.. சாக்கடையில் சொகுசான உறக்கத்துடன் குளியல்..!! போதை இளைஞரின் வைரல் வீடியோ..!!
in Madurai youngster drunk and sleep in sewage
நாம் இன்றுள்ள காலத்தில் இணையவாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில்., இணையம் அறிமுகமான சமயத்தில் ஒவ்வொருவராக அடிமையாகி வந்ததை போன்று., மதுவுக்கும் தொடர்ந்து அடிமையாகிக்கொண்டு வருகிறோம். தற்போது அனைத்து விதமான தகவலும் இணையத்தின் மூலமாக நாம் அறிந்து கொண்டு வருகிறோம்.
அவ்வாறு நாம் அறியும் பல விஷயத்தில் நம்மை நகைப்பிற்கு உள்ளாக்கும் சில விஷயமும் இருக்கும். சில விஷயங்கள் நம்மை பெரும் துயருக்கு ஆழ்த்துவதும் உண்டு.. உலகின் பல இடத்தில் நடக்கும் பிரச்சனையில் இருந்து சிரிப்பான சம்பவங்கள் என அனைத்தும் இணையத்தின் மூலமாக வைரலாகி வருகிறது.
இதனைப்போன்று மதுவின் கெட்ட குணங்கள் குறித்து பல விதமான பாடங்கள் எடுத்தும்., மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை எடுத்துரைத்தாலும் அது இறுதியில் கானல் நீராக மற்றுமே இருக்கிறது. உலகிலேயே அதிகளவு இளைஞர்களை கொண்ட இந்திய நாட்டில் உள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையாகியது பெரும் வருத்தத்திற்குரியதே..
இந்த நிலையில்., தலைக்கேறிய போதையில் சாக்கடையில் விழுந்து உறங்கிய நபர் குறித்த காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கருப்பாயூரணி பகுதியை சார்ந்த இடத்தில் அரசு மதுபான கடையானது செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய 25 வயதுடைய இளைஞரொருவர் தள்ளாடும் போதையில் செய்வதறியாது இருந்துள்ளார்.
வீட்டிற்கு எப்படியாவது செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தள்ளாடிய நிலையில் இளைஞர் வந்த நேரத்தில்., அங்குள்ள சாக்கடையில் எதிர்பாராத விதமாக போதையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளார். பின்னர் எழுந்திருக்க முடியாமல் போதையில் சாக்கடையிலேயே வீட்டில் தூங்குவதை போல கால்களை ஒய்யாரமாக வைத்து உறங்குகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai youngster drunk and sleep in sewage