குற்றால சீசனை கொண்டாட தோழியுடன் வந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.! உதவி செய்ய வேண்டிய காவல் துறையும் அத்துமீறிய கொடூரம்.!!
in kutralam girl sexual abuse by police and culprits police investigation going on
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி அருகேயுள்ள சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இந்த குற்றாலத்தில் வருடம்தோறும் ஜூன்., ஜூலை., ஆகஸ்ட் மாதங்கள் சீசன் மாதங்கள் ஆகும். இந்த சீசனையை அனுபவிப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும்., இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்க்காக சீசன் சமயங்களில் அதிகளவில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம். இந்த சமயத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதியுடைய விடுதிகள்., தனியார் வீடுகள் மற்றும் மது பானக்கடைகள் என்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்படுத்ததாக வகையில்., உல்லாசம் அனுபவிக்க இடங்களும் இருக்கும்.
இந்த சமயத்தில்., நேற்று மாலையின் போது குற்றாலத்தில் உள்ள ஆர்யா பவனம் தனியார் காட்டேஜில் திருநெல்வேலியை சார்ந்த ரமணி என்ற பெண் அவரது தோழிகள் தங்கியிருந்துள்ளனர். இந்த சமயத்தில்., இவர்களை கண்ட அதே பகுதியை சார்ந்த கிளிண்டன் (வயது 23) என்ற காம கொடூரன் அவனது நண்பர்களால் ரமேஷ் பாபு., விஜய் ஆகியோருடன் சேர்ந்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளான்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் மிரண்டு இருக்கவே., உதவி செய்யவேண்டிய ஆயுதப்படை காவல் அதிகாரி மணிகண்டன் மற்றும் மகாலிங்கமும் கொடூரன்களுடன் சேர்ந்து உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாது கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்கவும் முயன்றுள்ளனர். இதனால் பதறிப்போன பெண்கள் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு காவலர் உட்பட ஐவரை கைது செய்து நீதிபதியின் முன்னிலையில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kutralam girl sexual abuse by police and culprits police investigation going on