மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த கல்லூரி மாணவனை வெட்டி சாய்த்த வீர தாயார்.! கிருஷ்ணகிரியில் தரமான பரபரப்பு சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்துள்ள ஊத்தங்கரை அடுத்துள்ள கல்லூர் கிராமத்தை சார்ந்த கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 13 வயதுடைய மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் நிலையில்., சிறுமியின் தாயார் தோட்ட வேலைக்கு சென்று வருவது வழக்கம். 

இந்த நிலையில்., சிறுமியின் தாயார் சம்பவத்தன்று தோட்ட பணிகளுக்கு சென்று நிலையில்., சிறுமி தனது தாயாரை காணுவதற்கு தோட்டத்திற்கு சென்றுள்ளார். சிறுமியை பின்தொடர்ந்து சிறுமியின் சொந்தகார வாலிபன் ராஜசேகர் (வயது 22) என்பவனும் பின்தொடர்ந்து வந்துள்ளான். 

சிறுமியை பின்தொடர்ந்து வந்த காம கொடூரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்த நிலையில்., சிறுமி பதட்டமுற்று அலறியுள்ளார். சிறுமியின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்., வயல்வெளியில் இருந்து பதறியபடி ஓடி வந்துள்ளார். 

sexual harassment, sexual abuse, sexual torture,

சிறுமியிடம் ராஜசேகர் அத்துமீறுவதை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் செய்வதறியாது திகைக்கவே., ராஜசேகர் சிறுமியின் தாயரின் காலில் கல்லை தூக்கி போட்டுள்ளான். வலியால் துடித்துப்போன தாயார் மகளை கயவனின் கொடூரத்தில் இருந்து பாதுகாக்க வயலுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து ராஜசேகரை வெட்டியுள்ளார். 

இதனால் ராஜசேகரின் இடது கையில் அரிவாள் பதிந்த நிலையில்.,  இவர்களின் சத்தம் கேட்டு கிராமத்தினர் மளமளவென விரைந்தனர். பின்னர் சம்பவ இடத்தில் நடந்ததை விசாரித்து ராஜசேகரை அடுத்து நொறுக்கிய பின்னர்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்., ராஜசேகர் அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri mother save her child from sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->