கட்டிலில் பங்கு போட்டவனை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்.!! திண்டுக்கல்லில் பரபரப்பு.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல்வேறு விதமான பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., கள்ளக்காதல் என்ற கணவனை / மனைவியை பிரிக்கும் நாடக காம மோக காதலால் பல்வேறு கொலைகளும்., துயரங்களும் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஓராண்டில் கள்ளக்காதல் பிரச்சனைக்காக நடைபெற்ற கொலைகள் ஆயிரத்தை தாண்டியுள்ளது சோகத்தை ஏற்படுத்துகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் காமராஜர் நகரினை சார்ந்தவர் பிரபு (வயது 32). இவர் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சார்ந்தவர் சண்முகம். இவரது மனைவியின் பெயர் நிர்மலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

நிர்மலாவிற்கும் - பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ரீதியிலான பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த உல்லாச வாழ்க்கையானது சண்முகத்துக்கு தெரியவரவே., இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். 

dingugal, dindukal illegal affair murder, painter murder dindugal,

இவரின் கண்டிப்பை ஏற்காத பிரபு - நிர்மலா இருவரும் கள்ளக்காதல் மோகத்தால் தொடர்ந்து பழகி வரவே., ஆத்திரமடைந்த சண்முகம் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த பிரபுவை கழுத்தறுத்து கொலை செய்தார். இதனால் துடிதுடித்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பிரபுவை கொலை செய்த சண்முகம் அங்கிருந்து தப்பி செல்லவே., இது குறித்த தகவலானது காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., சண்முகத்தை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukal painter murder due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->