கணவருக்கு மூன்று மனைவி.. மூன்றாவது மனைவிக்கு நான்கு கணவன்கள்.. தறிகெட்ட குடும்பத்தின் கள்ளக்காதல் கொலை தகராறு பின்னணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டையை அடுத்துள்ள மாதேமங்கலம் பகுதியை சார்ந்தவர் பழனி. இவர் கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நீலா, இரத்தினம் மற்றும் சவுமியா என்ற மூன்று மனைவிகள் இருந்துள்ளனர். 

பழனி தனது இரண்டாவது மனைவி ரத்தினத்துடன் பெங்களூரில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். சவுமியா தனது குழந்தைகளோடு மாதேமங்களம் கிராமத்தில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள காரிமங்கலம் திப்பம்பட்டி பகுதியை சார்ந்த வேலுசாமி (வயது 27) என்ற நபர் மாதேமங்கலத்தில் இருக்கும் தனது உறவினரின் இல்லத்திற்கு வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார்.

இந்த நேரத்தில், சவுமியாவிற்கும் - வேலுசாமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவ்வப்போது கள்ளகாதலியின் இல்லத்திற்கே வருகை தனது உல்லாசம் அனுபவித்து வேலுசாமி சென்றுள்ளான். இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதியன்று உல்லாச ஆசையுடன் வேலுசாமி சவுமியாவின் இல்லத்திற்கு வந்துள்ளான். 

உல்லாசத்திற்கு சவுமியாவை அழைக்கவே, சவுமியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேலுசாமியை சமாளிக்க தெரியாது திகைத்த பெண்மணி, தற்கொலை செய்துகொள்வதாக கூறி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி மிரட்டல் விடுக்கவே, ஆத்திரமடைந்த வேலுசாமி தீக்குச்சியை கொளுத்தி சவுமியாவின் மீது போட்டுள்ளான்.

உடலில் தீப்பற்றி எறிந்த நிலையில், வேலுசாமியின் உடலையும் சவுமியா விரைந்து வந்து கட்டிபிடித்துள்ளார். இதனால் இருவரும் பலத்த தீக்காயத்துடன் வீதியில் தீப்பற்றிய நிலையில் உருண்டு அலறவே, இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இவர்களை மீது தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சவுமியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேலுசாமி தொடர் சிகிச்சையின் கீழ் உள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பழனி தனது இரண்டாவது மணைவியுடன் பெங்களூருக்கு சென்ற நிலையில், தனியாக இருந்த சவுமியாவிக்கு நான்கு ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், வேலுசாமியுடன் பழகிய நேரத்திலேயே மற்றொரு நபருடன் தொடர்பில் சவுமியா இருந்து வந்த நிலையில், இந்த விஷயத்தை அறிந்த கள்ளக்காதலன் வேலுசாமி தட்டி கேட்டுள்ளான். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் மற்றும் வாக்குவாதத்தில் தீக்குளிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. வேலுசாமிக்கும் சவுமியா மூன்றாவது காதலியாக இருந்துள்ளார் என்பதும், வேலுசாமிக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் முறையற்ற பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dharmapuri girl died and murder attempt illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->