முறைதவறிய காதல்... கண்ணை மறைத்த பாசம்... கடலூரில் அரங்கேறிய பெரும் சோக சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள வலிஸ்பேட்டை வடக்குத்தெரு பகுதியை சார்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவியின் பெயர் ராக்கினி. இவர்கள் இருவருக்கும் எழில் (வயது 26) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் முடியவில்லை.

இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள குறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சார்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 28). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவர் எழிலுடைய பெரியம்மாவின் மகன் ஆவார். இவர் அவ்வப்போது எழிலின் இல்லத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்த நேரத்தில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் நேற்று மதியத்தில் எழில் வீட்டில் தனியாக இருந்த நிலையில், எழிலுடைய பெற்றோர் வயலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து சுரேஷ்குமார் எழிலின் வீட்டிற்கு வருகை தந்ததை அடுத்து, இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதன்பின்னர் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் எழிலை அடித்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் வயல் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் முகத்தில் காயத்துடன் பிணமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து எழிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சுரேஷ்குமார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பேருந்துக்காக காத்திருந்த சுரேஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை உறுதியானது.

இது தொடர்பான விசாரணையில், எனது தாயார் சகாயமேரியுடைய தந்தை ராகினி. இவரது மகள் எழில்.. நான் அவ்வப்போது ராகினியின் இல்லத்திற்கு சென்று வந்த சமயத்தில், எழிலிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, நாங்கள் காதலித்து வந்தோம். எழிலை சந்திக்கும் தருணத்தில் திருமணம் தொடர்பாக அவர் பேசிவந்த நிலையில், நேற்றும் திருமணம் குறித்து பேசினார். 

இருவரும் சேர்ந்து காதலித்து வந்தாலும், நாம் அண்ணன் தங்கை முறை.. நாம் திருமணம் செய்து வாழ இயலாது என்று கூறியதை அடுத்து, கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர்.. மேலும், திருமணம் செய்துகொள்ளாவிடில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக மிரட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்து எழிலை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore love girl murder due to illegal love relationship


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->