கள்ளக்காதலனை தாயுடன் சேர்ந்து கொலை செய்த பெண்.! விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி வாக்குமூலம்.!!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகேயுள்ள கீரப்பாளையத்தை சார்ந்தவர் சீனிவாசன் (வயது 24). இவர் எம்.எஸ்.சி பட்டதாரி ஆவார். இவர் தற்போது காவல் துறை நண்பர்கள் குழுவில் இருந்து வந்த நிலையில்., சேத்தியாத்தோப்பில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்., கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அங்கிருக்கும் கருவை காட்டில் அரைநிர்வாணமாக பிணமாக கிடந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த விசாரணைக்கு காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., கீரப்பாளையம் ஜெ.ஜெ.நகரை சார்ந்த குமார் என்பவரின் மனைவியான தாமரை செல்வி (வயது 26) என்பவர் கிராம நிர்வாக அலுவலகரின் முன்னிலையில் சரணடைந்து., நானும் எனது தாயாரும் சீனிவாசனை கொலை செய்தோம் என்று தெரிவித்தனர். 

இதனையடுத்து இவர்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்த பின்னர் இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., எனது கணவரான குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். எனது இரண்டு குழந்தைகளுடன் நான் வசித்து வந்த நிலையில்., கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக சீனிவாசனை சந்தித்த சமயத்தில் அவருக்கு இன்னும் திருமணம் முடியவிலை என்பது தெரியவந்தது. 

இந்த நிலையில்., இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்த நிலையில்., எங்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்தது. இதனையடுத்து நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இந்த தகவலானது அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்துவிட்டது. இதனால் மீண்டும் இல்லத்திற்கு வராதே என்று கூறியிருந்தேன். அவன் எனக்கே தெரியாமல் உல்லாசமாக இருந்ததை காட்சிப்பதிவு செய்து வைத்துள்ளான். 

இந்த விடியோவை எனது கணவருக்கு அனுப்பிவிடுவேன் மற்றும் இணையத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனை கேட்டு பயந்த நான் அவனை தீர்த்து கட்ட முடிவு செய்து எனது தாயாரிடம் கூறினேன். பின்னர் எங்களின் திட்டப்படி அவனை வீட்டிற்கு அழைத்து பேசிய நிலையில்., வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் அவனை கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டு மயக்கமடைந்தான். 

பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை அங்குள்ள காட்டுப்படுத்திக்கு தூக்கி சென்று வீசினோம். அவனது அலைபேசியை உடைத்து விட்டோம் என்று கூறினர். இதனையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிபதியின் முன்னிலையில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore culprit killed due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->