காதல் மனைவியை கொடூர கொலை..! கணவன் - கூட்டணியில் நண்பர்கள்.. விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குட்டை பகுதியை சார்ந்தவர் மோகனேஸ்வரி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பகுதியில் வசித்து வரும் இளைஞரின் பெயர் கோபி. கோபிக்கும் - மோகனேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். 

கோபிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில்., திருமணத்திற்கு பின்னர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளான். இந்த நிலையில்., ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரத்தை இழந்த மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். 

இதனையடுத்து தனது தாயாரின் இல்லத்தில் இருந்தே அங்குள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்த நிலையில்., தாயாரின் இல்லத்திற்கு சென்ற மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைக்காமல் கோபி இருந்துள்ளார். இந்த நிலையில்., கடந்த 10 ஆம் தேதியன்று அங்குள்ள கங்காபுதூர் பகுதியில் இருக்கும் முட்புதரில் மோகனேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்து பிணமாக இருந்துள்ளார். 

died, murder, killed, suicide attempt,

முட்புதரில் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., மோகனேஸ்வரியை அவரது கணவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

இந்த சமயத்தில்., வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கோபியை தேடிவந்த நிலையில்., கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் கோபியே தாமாக சரணடைந்தார். மேலும்., தன்னுடன் சேர்த்து வாழ மோகனேஸ்வரி மறுப்பு தெரிவித்ததால்., அவரை நண்பர்களின் உதவியோடு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore wife killed by husband and his friends


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->