சொந்த மகளையே சீரழித்த தந்தை.! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கண்ணீருடன் வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in coimbatore girl rapped by her father police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தளவில் பல அத்துமீறல்கள் நடந்து கொண்டு இருப்பது வெளிவந்து பெரும் பரபரப்பை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டபாளையம் பகுதியை சார்ந்த 38 வயதுடைய கூலித் தொழிலாளி வசித்து வந்தான். இவனிற்கு 12 வயதுடைய அழகான பெண் குழந்தையும்., 10 வயதுடைய அழகான மகனும் உள்ளனர். சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில்., பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சிறுமியின் பள்ளியில் நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுமி., ஆசிரியர்களின் பேச்சுக்களை கவனித்து வந்த நிலையில்., நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் தனது வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை கூறி கதறியழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக இது குறித்து சிறுமியின் தாயாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை கேட்டு அதிர்ச்சியான தாயார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்., சொந்த மகளுக்கு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காம கொடூரனை கைது செய்த காவல் துறையினர் அவனை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in coimbatore girl rapped by her father police investigation going on