குழந்தை பாக்கியமும் இல்லை.. நிம்மதியும் இல்லை.. பிறப்புறுப்பை அறுத்துக்கொண்ட கணவன்.. பதறிப்போன மனைவி...!!
in chennai husband cut urinal part due to fight
தமிழகத்தின் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை அருகேயுள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு (வயது 40). இவரது மனைவியின் பெயர் தேவி (35). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்கு மேலாக ஆகிறது.
இருப்பினும் இவர்கள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால்., கடுமையான மனவருத்தத்திற்கு உள்ளான பாபு மது அருந்தும் பழக்கத்தை கையெடுத்துள்ளார்.
இதனையடுத்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பாபு தினமும் தேவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் தினமும் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில்., ஒரு சமயத்திற்கு மேலாக வெறுப்பு கொண்ட தேவி தனது கணவரை பிரிய முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து தேவி விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தாயாரின் இல்லத்திற்கு சென்று தங்கியிருந்துள்ளார். இந்த நேரத்தில்., புத்தாண்டை கணவருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கு வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., வழக்கம்போல பாபு போதையில் இருந்ததை அடுத்து., இருவருக்குள் வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேவி தனது தாயரின் இல்லத்திற்கு செல்வதாக தெரிவித்ததை அடுத்து விரக்தியடைந்த பாபு கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை அறுத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் வலி பொறுக்காது பாபு அலறவே., அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள ஸ்டாண்லி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பாபுவுக்கு தற்போது தீவிர சிகிச்சையளித்து வரும் நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in chennai husband cut urinal part due to fight