அன்பான வார்த்தைகளால் கவர பேசி... துரோகத்தை நெஞ்சில் குத்திய கொடூரன்.. மீளாத்துயரில் இளம்பெண்.!!
in Chennai girl cheated poice arrest culprit
தமிழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம் பகுதியை சார்ந்த 24 வயதுடைய விதவை பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனை கண்டா இரமேஷ் (வயது 34) என்ற நபர், விதவை பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும், தான் துறைமுகத்தில் பணியாற்றி வருவதாகவும், விதவை பெண்ணிற்கு திருமணம் வாழ்க்கை கொடுப்பதே தனது இலட்சியம் என்று கூறி, கடந்த வருடத்தின் அக்டோபர் மாதத்தின் போது இரமேஷிற்கும் - விதவை பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்திற்கு 25 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 இலட்சம் வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமண அழைப்பிதழை தயார் செய்து உறவினர்களுக்கு வழங்கி வந்த நிலையில், நிச்சயதார்த்தம் நிறைவு பெற்ற சில நாட்கள் வரை விதவை பெண்ணின் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க செல்வதாக சென்றவர் பணம் மற்றும் நகைகளை எடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதன் பின்னர் வீடு திரும்பாமல் இருந்து வந்த நிலையில், இவரது அலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மோசடி நடந்துள்ளதை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைக்கு பினர், ரமேஷிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முதல் திருமணம் செய்த பெண்ணிடம் தன்னை அரசு அதிகாரி என்று கூறி திருமணம் செய்துள்ளான்.
திருமணத்திற்க்கு பின்னர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், பலரிடம் அரசு வேலை பெற்று தருவதாக கூறி பல இலட்சம் மோசடி செய்த விவகாரமும் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த ரமேஷ் தலைமறைவாகவே, இது தொடர்பாக தனிப்படை அமைத்து காவல் துறையினர் நேற்று ரமேஷை கைது செய்தனர். இவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai girl cheated poice arrest culprit