பசியால் துடித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கையில் நேர்ந்த சோகம்.! கள்ளகாதலனின் கொடூரம்...!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னை கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் துர்கா (வயது 25). இதே பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஜான்குமார் என்ற 5 வயதுடைய மகனும்., ஜெனிபர் என்ற 4 வயதுடைய மகளும் உள்ளனர். 

இந்த நிலையில்., துர்காவிற்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இருவரும் பிரிந்த நிலையில்., கே.கே.நகரில் உள்ள அம்பேத்கார் காலனி பகுதியை சார்ந்த எல்லப்பன் (வயது 27) என்பவருடன் பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளகாதலாக மாறியுள்ளது. 

இதனைத்தொடர்ந்து கள்ளக்காதலனுடன் துர்கா அம்பேத்கார் காலனியில் வீடெடுத்து தங்கியிருந்த நிலையில்., தினமும் இருவரும் மது அருந்திவிட்டு உறங்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். இதன் காரணமாக கள்ளக்காதல் ஜோடிக்கு ராஜ்மாதா என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மேலும்., தற்போது குழந்தை பிறந்ததால் கள்ளக்காதலனுடன் இருந்த நெருக்கத்தை தவிர்த்துள்ளார். 

மேலும்., இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் குழந்தையை துன்புறுத்தி துர்காவுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான். இந்த தருணத்தில்., அதிகாலை சமயத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்த துர்காவிடம் இருந்து குழந்தையை தூக்கி வீசி., துர்காவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளான். மேலும்., பால் குடித்துக்கொண்டு இருந்த குழந்தையானது பசியால் கதறித்துடித்த காரணத்தால்., குழந்தையை நோக்கி துர்கா சென்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் எல்லப்பன் குழந்தையை தூக்கி வீசியதில்., குழந்தை சுற்றின் மீது மோதி தலையில் இருந்து இரத்தம் வெளியேறி உயிருக்கு போராடி துடித்த நிலையில்., கொடூரன் எந்த விதமான சலனமும் இன்றி உல்லாசம் அனுபவித்து விட்டு சென்றுள்ளான். குழந்தையை துர்கா பார்த்த சமயத்தில் பேச்சுமூச்சின்றி இருந்த நிலையில்., அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்து., மருத்துவமனை வளாகத்திலேயே கதறியழுதார். மேலும்., இந்த விஷயம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai baby died by illegal affair killed father


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->