இரத்த வெள்ளத்துடன் மிதந்த பிரபல நடிகரின் தந்தை.! சோகத்தில் தமிழ் திரையுலகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படத்தில் தக திமி தா, முன்தினம் பார்த்தேன் மற்றும் இவனுக்கு தண்ணில கண்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்த திரைப்பட நடிகர் தீபக் தினகர். இதுமட்டுமல்லாது இவர் திருமதி செல்வம் மற்றும் தென்றல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்தது மட்டுமல்லாது., தொகுப்பாளராகவும் தன்னை அறிமுகம் செய்து மக்களிடையே பிரபலமடைந்தவர். இவர் சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் வசித்து வரும் நிலையில்., இவரது தந்தை விருகம்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். 

இந்த சமயத்தில்., தீபக்கின் தாயார் கும்பகோணத்திற்கு 26 ஆம் தேதி சென்ற நிலையில்., வீட்டின் தனிமையில் இருந்த தீபக்கின் தந்தை விட்டல் இரத்த வெள்ளத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அறியாத அக்கம் பக்கத்தினர் எப்போதும் போல இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில்., கும்பகோணத்திற்கு சென்ற மனைவி வீட்டிற்கு வந்து பார்த்த சமயத்தில்., விட்டல் இரத்த வெள்ளத்துடன் இறந்து கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பதறியபடி அலறவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்ததை அடுத்து தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விட்டலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai actor father died police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->