7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... வலியால் அலறிய சிறுமி.. செங்கல்பட்டில் பேரதிர்ச்சி..!!
in chengalpat child sexual abuse police arrest culprit
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ஆய்வுகளின் படி தினமும் சராசரியாக 83 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2018 ஆண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.
33 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டைவிட பெண்களுக்கு எதிரான வழக்குகள் 19 ஆயிரம் வழக்குகள் அதிகரித்து 3 லட்சத்து 78 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றத்திற்கு சட்டங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், பல பாலியல் பலாத்கார குற்றங்கள் இளம் சிறுமிகள் மற்றும் பருவமடையாத குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படும் கொடூரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பி.வி களத்தூர் பகுதியை சார்ந்த 7 வயதுடைய சிறுமி, இதே பகுதியை சார்ந்த கார்த்திக் என்ற காம கொடூரனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சிறுமி பிறப்புறுப்பு வலி தாங்க இயலாது அழுதுகொண்டே இருந்த நிலையில், சிறுமியை கவனித்த பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவலாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளிக்கவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கார்த்திக் என்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in chengalpat child sexual abuse police arrest culprit