மனைவி கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் 2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அந்தோணியார் ஆலயத்துக்கு இருவரும் வந்தனர். அப்போது அந்தோணி பிச்சை மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு  முயன்றார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்தோணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது மகன் அளித்த வாக்குமூலத்தில் எனது பெற்றோருக்கும், என் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சகோதரிகளின் திருமணத்திற்கு வாங்கியதால் கடன் ஏற்பட்டதாகவும் அதனை திரும்ப தர முடியாததால் மன உளைச்சலில் இருந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, அவர்களது இந்த முடிவுக்கு காரணம் இது தானா அல்லது வேறு காரணம் உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband Killed His wife and attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->