அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பரபரப்பு பேட்டி!
Heavy Rain Alert Delta and chennai cuddalore
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் தெரிவித்தாவது, "வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாக வாய்ப்பு இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Heavy Rain Alert Delta and chennai cuddalore