அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விஏஓ கைது.! - Seithipunal
Seithipunal


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கு, திருமணமாகி கணவன் மற்றும் 3 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த இளம் பெண்ணுக்கு விஏஓ முருகேசன் (வயது 55) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதில் இளம் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சான்றிதழ்களை கேட்கும் சாக்கில் இளம் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது அங்கே அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். 

இது குறித்து அந்த பெண் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகழ் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பொலவபாளையத்தில் தனது வீட்டு குளியல் அறையில் பதுங்கி இருந்த விஏஓ முருகேசன் கைது செய்தனர்.

அதேபோல் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில் விஏஓ ஒருவர் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்து, தனது 15 வயது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harassment to married girl VAO arrested in erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->