பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கிறார் சேகர் பாபு - ஹெச் ராஜா காட்டம்.!! - Seithipunal
Seithipunal


பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கிறார் சேகர் பாபு - ஹெச் ராஜா காட்டம்.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைக்கோவிலுக்கு மாற்று மதத்தை சேர்ந்த சிலர் செல்ல முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். மேலும் இந்த செயலுக்கு இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து கோவிலில் ’இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை’ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த அறிவிப்பு பலகை அப்புறப்படுத்தப்பட்டது. 

இதற்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘’பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. 

கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே ’இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை’ என்ற அறிவிப்பு பலகையை அறநிலையத்துறை வைத்தது. பின்னர் மிரட்டலுக்கு பயந்து அதனை அகற்றியுள்ளது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இந்தத் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்’’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja tweet about only hindus allowed palani temple baner


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->