தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளது என்று கூறுவதே பொய் பித்தலாட்டம் - பாஜக எச்.ராஜா.!
H Raja speech about TN govt and migrant workers
தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது என்று கூறுவதே பித்தலாட்டம் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தி அவர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது என்று கூறுவதே பொய் பித்தலாட்டம். ஏனென்றால் 19 ஆர்.எஸ்.எஸ் முன்னணியினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தினமும் ஒரு படுகொலை நடக்கிறதுநடக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் வேலைகளை தமிழர்கள் பார்ப்பதற்கு தயாராக இல்லாத சூழலில் நாம் இருக்கிறோம். அதனால் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழ் பேசுபவரின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், 1969 காலகட்டத்தில் குடிப்பழக்கம் என்றால் என்ன என்பதே தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் கள்ளுக்கடை தொடங்கி தமிழர்களை குடிகாரர்களாக்கியது கருணாநிதி தான். அவரது மகன் ஸ்டாலின் ஆட்சி படு மோசமான ஆட்சி. அவர்களின் பொய் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது.
மேலும், வட மாநில தொழிலாளர்கள் அவர்களாகவே இங்கு வரவில்லை இங்கே உள்ளவர்கள் தான் ரயிலில் புக் பண்ணி அழைத்து வருகின்றனர். ஆனால், சிலரோ எங்களுக்கு ஓட்டு போடுவதற்காக இங்கே திரட்டி வருவதாக குறை கூறி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
H Raja speech about TN govt and migrant workers