திருமணமான 5 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட மணமகன்.. தஞ்சை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


திருமணம் செய்து கொண்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத், குவைத்தில் வேலை செய்து வந்த இவர் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 5ம் தேதி இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், அவருக்கும் மனைவிக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அவர் சம்பவதன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். இதனை அடுத்து, அறைக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Groom Committed Suicide in Thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->