அரசு பேருந்து மற்றும் நடத்துனர் மீது கல்வீச்சு தாக்குதல்: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுடலை மணி என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் நடத்துனராக  பணியாற்றிக் கொண்டிருந்தார். 

இந்த அரசு பேருந்து அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள நவலட்சுமிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். 

இதில் நடத்துனர் கார்த்திக் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டி சென்றார். இருப்பினும் மர்ம கும்பல் பேருந்து துரத்தி பின்பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்து கண்ணாடிகள் உடைந்தது. 

இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் உடனடியாக அரசு மருத்துவமனையில் பேருந்தை நிறுத்தி நடத்துனருக்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பிறகு இது குறித்து போலீசானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் பேருந்தில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக திருச்செந்தூரில் இறக்கிவிட்டு ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்திற்கு சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt bus and conductor attack Police investigation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->