#Breaking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் அசத்தல் அறிவிப்பு.!
govt alert special bus for diwali
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பண்டிகைகளுக்கு பொதுமக்களுக்கு விடுமுறை அளித்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட சிறப்பு பேருந்துகளையும் ஏற்பாடு செய்து வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விடுமுறையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடினார்கள்.
அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர், "தீபாவளியை முன்னிட்டு 16,688 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதிலும் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சிறப்பு பேருந்துகளானது அக்டோபர் 21,22 மற்றும் 23 உள்ளிட்ட தேதிகளில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து இயக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார். அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
govt alert special bus for diwali